ஞாயிறு, 28 மார்ச், 2010

கடைசி ஆசை!

என் மூச்சுக்காற்றாய்
உன்னை சுவாசித்தேன்;
என் மூச்சையே
நிருத்திவிட்டாயடி!

என் வாழ்க்கைத்துணையாய்
உன்னை யாசித்தேன்;
என் வாழ்க்கையை
முறித்துவிட்டாயடி!

என் உயிருக்கும் மேல்
உன்னை நேசித்தேன்;
இதோ-என் உயிரையும்
பறித்துவிட்டாயடி!

கடைசியாக ஒரு ஆசை....

உன் காலடித்தடங்களின்
கைப்பிடி மண்ணெடுத்து
என் கல்லறை சுவற்றுக்கு
கலப்படமாய் தந்துவிடு;
உன் பாதச்சுவடுகளில்
படுத்து உறங்குகிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக