என் மூச்சுக்காற்றாய்
உன்னை சுவாசித்தேன்;
என் மூச்சையே
நிருத்திவிட்டாயடி!
என் வாழ்க்கைத்துணையாய்
உன்னை யாசித்தேன்;
என் வாழ்க்கையை
முறித்துவிட்டாயடி!
என் உயிருக்கும் மேல்
உன்னை நேசித்தேன்;
இதோ-என் உயிரையும்
பறித்துவிட்டாயடி!
கடைசியாக ஒரு ஆசை....
உன் காலடித்தடங்களின்
கைப்பிடி மண்ணெடுத்து
என் கல்லறை சுவற்றுக்கு
கலப்படமாய் தந்துவிடு;
உன் பாதச்சுவடுகளில்
படுத்து உறங்குகிறேன்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக