அழாதே தமிழா...
அண்ணன் இருக்கிறான்,
நிச்சயம் வருவான்,
தனிநாடு பெறுவான்!
ஆறுதலாய் இங்கே
அன்புச்சகோதரன்!
அடங்காதே தமிழா...
தமிழர்தலை நிமிரட்டும்,
அலைகடலென திரளட்டும்,
உலகமே மிரளட்டும்,
ஆவேசமாய் இங்கே
தன்மானத்தமிழன்!
சிலர் வெடித்தார்,
சிலர் துடித்தார்-ஏன்
முத்துக்குமரனைப்போல்
சிலர் மடிந்தார்!
ஆனாலும் இங்கே
சிலர் நடித்தார்!
அதனால்தான் தமிழனை அங்கே முடித்தார்!
மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக