காதல் தோல்வியோ...!
வானிலிருந்து குதித்து தற்கொலை
செய்துகொண்டது-மழைத்துளி!
பூர்வஜென்மத்து வரமோ...!
வருபவர்க்கெல்லாம் நிழல்தந்து
வாடிக்கொண்டிருக்கிறது -மரம்!
யார்விட்ட சாபமோ...!
கல்லாகவே காட்சிதருகிறார்
கடவுள்!
எவ்வளவு சம்பளம்...!
மாதம் ஒரு விடுப்போடு இரவெல்லாம்
பூமிக்கு கூர்காவாய்-நிலவு!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக