என் மூச்சுக்காற்றாய்
உன்னை சுவாசித்தேன்;
என் மூச்சையே
நிருத்திவிட்டாயடி!
என் வாழ்க்கைத்துணையாய்
உன்னை யாசித்தேன்;
என் வாழ்க்கையை
முறித்துவிட்டாயடி!
என் உயிருக்கும் மேல்
உன்னை நேசித்தேன்;
இதோ-என் உயிரையும்
பறித்துவிட்டாயடி!
கடைசியாக ஒரு ஆசை....
உன் காலடித்தடங்களின்
கைப்பிடி மண்ணெடுத்து
என் கல்லறை சுவற்றுக்கு
கலப்படமாய் தந்துவிடு;
உன் பாதச்சுவடுகளில்
படுத்து உறங்குகிறேன்!
ஞாயிறு, 28 மார்ச், 2010
சனி, 27 மார்ச், 2010
மழைத்துளியே!
யார்மடியில் நீ பிறந்தாய்?
யாரைத்தேடி ஓடிவந்தாய்?
மண்ணின் மடியில் மடிந்துபோன
மழைத்துளியே....
மண்ணை முத்தமிட்டதில்
வெற்றிகண்டாயோ-இல்லை
மரணத்தையே முத்தமிட்டு
வெற்றிகொண்டாயோ!
யாரைத்தேடி ஓடிவந்தாய்?
மண்ணின் மடியில் மடிந்துபோன
மழைத்துளியே....
மண்ணை முத்தமிட்டதில்
வெற்றிகண்டாயோ-இல்லை
மரணத்தையே முத்தமிட்டு
வெற்றிகொண்டாயோ!
ஹைக்கூ....
காதல் தோல்வியோ...!
வானிலிருந்து குதித்து தற்கொலை
செய்துகொண்டது-மழைத்துளி!
பூர்வஜென்மத்து வரமோ...!
வருபவர்க்கெல்லாம் நிழல்தந்து
வாடிக்கொண்டிருக்கிறது -மரம்!
யார்விட்ட சாபமோ...!
கல்லாகவே காட்சிதருகிறார்
கடவுள்!
எவ்வளவு சம்பளம்...!
மாதம் ஒரு விடுப்போடு இரவெல்லாம்
பூமிக்கு கூர்காவாய்-நிலவு!
வானிலிருந்து குதித்து தற்கொலை
செய்துகொண்டது-மழைத்துளி!
பூர்வஜென்மத்து வரமோ...!
வருபவர்க்கெல்லாம் நிழல்தந்து
வாடிக்கொண்டிருக்கிறது -மரம்!
யார்விட்ட சாபமோ...!
கல்லாகவே காட்சிதருகிறார்
கடவுள்!
எவ்வளவு சம்பளம்...!
மாதம் ஒரு விடுப்போடு இரவெல்லாம்
பூமிக்கு கூர்காவாய்-நிலவு!
புதன், 24 மார்ச், 2010
ஈழம்!
அழாதே தமிழா...
அண்ணன் இருக்கிறான்,
நிச்சயம் வருவான்,
தனிநாடு பெறுவான்!
ஆறுதலாய் இங்கே
அன்புச்சகோதரன்!
அடங்காதே தமிழா...
தமிழர்தலை நிமிரட்டும்,
அலைகடலென திரளட்டும்,
உலகமே மிரளட்டும்,
ஆவேசமாய் இங்கே
தன்மானத்தமிழன்!
சிலர் வெடித்தார்,
சிலர் துடித்தார்-ஏன்
முத்துக்குமரனைப்போல்
சிலர் மடிந்தார்!
ஆனாலும் இங்கே
சிலர் நடித்தார்!
அதனால்தான் தமிழனை அங்கே முடித்தார்!
மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்!
காதலித்துப்பார்....
காகம் கரைவதுகூட
கானா பாடலாகும்;
கழுதையின் சத்தம்கூட
காதுகளில் கவிதைபாடும்!
முள்ளின் நுனியும்கூட
கையில் பேனாவாகும்;
கள்ளிச்செடியும்கூட
காதலின் சின்னமாகும்!
கானா பாடலாகும்;
கழுதையின் சத்தம்கூட
காதுகளில் கவிதைபாடும்!
முள்ளின் நுனியும்கூட
கையில் பேனாவாகும்;
கள்ளிச்செடியும்கூட
காதலின் சின்னமாகும்!
செவ்வாய், 23 மார்ச், 2010
தமிழ்!
பாலூட்டி வளர்த்தது
தாயென்றால்-எமை
தாலாட்டி வளர்த்தது தமிழன்றோ!
கல்தோன்றி மண்தோன்றா காலத்து
முன்னரே தோன்றிய
மொழியன்றோ!
பார்போற்றும் செம்மையான
மொழியென்றால்-எம்
தமிழுக்கு நிகர்
வேறுண்டோ!
தேனைவிடச் சுவை
உண்டென்றால்-அது
பார்கடல் தந்த அமுதன்றோ,
அதைவிடச்சுவை எதுவென்றால்
திகட்டாது தித்திக்கும்
தமிழன்றோ!
தாயென்றால்-எமை
தாலாட்டி வளர்த்தது தமிழன்றோ!
கல்தோன்றி மண்தோன்றா காலத்து
முன்னரே தோன்றிய
மொழியன்றோ!
பார்போற்றும் செம்மையான
மொழியென்றால்-எம்
தமிழுக்கு நிகர்
வேறுண்டோ!
தேனைவிடச் சுவை
உண்டென்றால்-அது
பார்கடல் தந்த அமுதன்றோ,
அதைவிடச்சுவை எதுவென்றால்
திகட்டாது தித்திக்கும்
தமிழன்றோ!
பெண்ணே...
வறண்டுகிடக்கும் பாலைக்கும்,
வளர்ந்துநிற்கும் பயிருக்கும்,
வானம்தான் காரணமாமே;
இல்லை,
உன் நாணம்தான் என்று
நான் சொல்வேன்!
உன் நாணம்,
பயிருக்கு உரமாகியிருக்கும்!
பாலைக்கு உருமாற்றியிருக்கும்!
வளர்ந்துநிற்கும் பயிருக்கும்,
வானம்தான் காரணமாமே;
இல்லை,
உன் நாணம்தான் என்று
நான் சொல்வேன்!
உன் நாணம்,
பயிருக்கு உரமாகியிருக்கும்!
பாலைக்கு உருமாற்றியிருக்கும்!
திங்கள், 22 மார்ச், 2010
தாய்!
பாசம் வைத்தாய்,நேசம் வைத்தாய்;
நடக்க வைத்தாய்,ஓட வைத்தாய்;
சிரிக்க வைத்தாய்,சிந்திக்க வைத்தாய்;
அழகு தமிழை கற்றுக்கொடுத்தாய்,
அன்போடு என்னை -நீ
வளர்த்தாய்,என்னை
பெற்றெடுத்த தாயே....
நீதானே எனக்கு உயிர்கொடுத்தாய்!
நடக்க வைத்தாய்,ஓட வைத்தாய்;
சிரிக்க வைத்தாய்,சிந்திக்க வைத்தாய்;
அழகு தமிழை கற்றுக்கொடுத்தாய்,
அன்போடு என்னை -நீ
வளர்த்தாய்,என்னை
பெற்றெடுத்த தாயே....
நீதானே எனக்கு உயிர்கொடுத்தாய்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)