முயற்ச்சியை மூச்சிலே
கலக்கணும்,
உயர்வுக்கு உன்னதமாய்
உழைக்கணும்,
அவமானங்களை அடித்து
நொறுக்கணும்,
தோல்விகளை கொஞ்சம்
பொறுக்கணும்;
இரவு என்பது
நாளும் வரும்;
நேற்றிரவு நாளை வராது!
கரைந்துபோன நேரங்களை
மறந்துவிட்டு,
பறந்து போகும் காலத்தில்
விரைந்து செல்;
அங்கே வெற்றியென்னும் பூக்கள்
நிறைந்திருக்கின்றன!
உழைக்கும் கரங்களுக்காக
மலர்ந்திருக்கின்றன!
வாழ்க்கையில் வென்றால்
வரலாறு!
வாழ்க்கையை வென்றால்
சரித்திரம்!
வாழும்போது வரலாறாய் இரு,
வாழ்ந்தபின் சரித்திரமாவாய்!
திங்கள், 3 மே, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)