செவ்வாய், 23 மார்ச், 2010

தமிழ்!

பாலூட்டி வளர்த்தது

தாயென்றால்-எமை

தாலாட்டி வளர்த்தது தமிழன்றோ!

கல்தோன்றி மண்தோன்றா காலத்து

முன்னரே தோன்றிய

மொழியன்றோ!

பார்போற்றும் செம்மையான

மொழியென்றால்-எம்

தமிழுக்கு நிகர்

வேறுண்டோ!

தேனைவிடச் சுவை

உண்டென்றால்-அது

பார்கடல் தந்த அமுதன்றோ,

அதைவிடச்சுவை எதுவென்றால்

திகட்டாது தித்திக்கும்

தமிழன்றோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக