திங்கள், 3 மே, 2010

தோழா!

முயற்ச்சியை மூச்சிலே

கலக்கணும்,

உயர்வுக்கு உன்னதமாய்

உழைக்கணும்,

அவமானங்களை அடித்து

நொறுக்கணும்,

தோல்விகளை கொஞ்சம்

பொறுக்கணும்;





இரவு என்பது

நாளும் வரும்;

நேற்றிரவு நாளை வராது!



கரைந்துபோன நேரங்களை

மறந்துவிட்டு,

பறந்து போகும் காலத்தில்

விரைந்து செல்;

அங்கே வெற்றியென்னும் பூக்கள்

நிறைந்திருக்கின்றன!

உழைக்கும் கரங்களுக்காக

மலர்ந்திருக்கின்றன!



வாழ்க்கையில் வென்றால்

வரலாறு!

வாழ்க்கையை வென்றால்

சரித்திரம்!

வாழும்போது வரலாறாய் இரு,

வாழ்ந்தபின் சரித்திரமாவாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக