தமிழ்(ழா )!
பாலூட்டி வளர்த்தது
தாயென்றால் - எம்மை
தாலாட்டி வளர்த்தது தமிழன்றோ!
பார்போற்றும் செம்மையான
மொழியென்றால் - எம்
தமிழுக்கு நிகர் வேறுண்டோ?
தேனைவிடச் சுவை
உண்டென்றால் - அது
பாற்கடல் தந்த அமுதன்றோ;
அதைவிடச் சுவை
எதுவென்றால்? - என்றும்
திகட்டாது தித்திக்கும் தமிழன்றோ!
ஐம்பெரும் காப்பியம் தந்த மொழி
எட்டுத்தொகை நூல் கொண்ட மொழி
பதினென் கீழ்கணக்கு உள்ள மொழி
இலக்கணம் இலக்கியம் சிறந்த மொழி!
பல்லாயிரம் ஆண்டுகள் பழமைதான்
படிக்க என்றும் இனிமைதான் - இதிலே
கவிகளும் கதைகளும் அருமைதான்
வள்ளுவன் பாரதி எங்கள் பெருமைதான்!
நிறத்தில் நாங்கள் கருப்பாக
வீரத்தில் இருப்போம் நெருப்பாக
அறிவில் என்றும் சிறப்பாக
வாழ்வோம் இவ்வுலகில் பொறுப்பாக!
அடிமைத்தனத்தை அறுத்திடுவோம்
சாதிய முறையை ஒழித்திடுவோம்
உயர்வுக்கு உன்னதமாய் உழைத்திடுவோம்
நாம் தமிழரென்றே -
இவ்வுலகிற்கு உணர்த்திடுவோம்!
-எழுத்து -
பாலூட்டி வளர்த்தது
தாலாட்டி வளர்த்தது தமிழன்றோ!
பார்போற்றும் செம்மையான
மொழியென்றால் - எம்
தமிழுக்கு நிகர் வேறுண்டோ?
தேனைவிடச் சுவை
உண்டென்றால் - அது
பாற்கடல் தந்த அமுதன்றோ;
அதைவிடச் சுவை
எதுவென்றால்? - என்றும்
திகட்டாது தித்திக்கும் தமிழன்றோ!
ஐம்பெரும் காப்பியம் தந்த மொழி
எட்டுத்தொகை நூல் கொண்ட மொழி
பதினென் கீழ்கணக்கு உள்ள மொழி
இலக்கணம் இலக்கியம் சிறந்த மொழி!
பல்லாயிரம் ஆண்டுகள் பழமைதான்
படிக்க என்றும் இனிமைதான் - இதிலே
கவிகளும் கதைகளும் அருமைதான்
வள்ளுவன் பாரதி எங்கள் பெருமைதான்!
நிறத்தில் நாங்கள் கருப்பாக
வீரத்தில் இருப்போம் நெருப்பாக
அறிவில் என்றும் சிறப்பாக
வாழ்வோம் இவ்வுலகில் பொறுப்பாக!
அடிமைத்தனத்தை அறுத்திடுவோம்
சாதிய முறையை ஒழித்திடுவோம்
உயர்வுக்கு உன்னதமாய் உழைத்திடுவோம்
நாம் தமிழரென்றே -
இவ்வுலகிற்கு உணர்த்திடுவோம்!
-எழுத்து -
வஞ்சி.க.தங்கமணி