ஞாயிறு, 18 ஜனவரி, 2015

                       தமிழ்(ழா )!

பாலூட்டி வளர்த்தது                
தாயென்றால் - எம்மை 
தாலாட்டி வளர்த்தது தமிழன்றோ!

 பார்போற்றும்  செம்மையான

மொழியென்றால் - எம்
தமிழுக்கு நிகர் வேறுண்டோ?


தேனைவிடச் சுவை
உண்டென்றால் - அது
பாற்கடல் தந்த அமுதன்றோ;

அதைவிடச் சுவை
எதுவென்றால்? - என்றும்
திகட்டாது தித்திக்கும் தமிழன்றோ!

ஐம்பெரும் காப்பியம் தந்த மொழி
எட்டுத்தொகை நூல் கொண்ட மொழி
பதினென் கீழ்கணக்கு உள்ள மொழி
இலக்கணம் இலக்கியம் சிறந்த மொழி!


பல்லாயிரம் ஆண்டுகள் பழமைதான்
படிக்க என்றும் இனிமைதான் - இதிலே 

கவிகளும் கதைகளும் அருமைதான்
வள்ளுவன் பாரதி எங்கள் பெருமைதான்!

நிறத்தில் நாங்கள் கருப்பாக
வீரத்தில் இருப்போம் நெருப்பாக
அறிவில்  என்றும் சிறப்பாக
வாழ்வோம் இவ்வுலகில் பொறுப்பாக!



அடிமைத்தனத்தை அறுத்திடுவோம்
சாதிய முறையை ஒழித்திடுவோம்
உயர்வுக்கு உன்னதமாய் உழைத்திடுவோம்
நாம் தமிழரென்றே -
இவ்வுலகிற்கு உணர்த்திடுவோம்! 




                                                                                   
                                                                  -எழுத்து -
                                                        வஞ்சி.க.தங்கமணி